ஓன்டாரியோ பள்ளிக்கூட மாணவர்களுக்கு இணையவழி கல்வி நடவடிக்கை ஆரம்பம்
கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மார்ச் இரண்டாவது வாரம் முதல் மூடப்பட்டுள்ள ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்களுக்கு இணையவழி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
இதன் பிரகாரம் இளமழலை(Kindergarten) வகுப்பு முதல் 06ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு பத்து மணித்தியால கற்றல் செயற்பாடுகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ள.
உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாராந்தம் ஒவ்வொரு பாடங்களுக்கும் மூன்று மணிநேர கல்விச் செயற்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையின் ஊடாக மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் தரமுயர்த்தல் ஆகியன வழமை போன்று இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் ஸ்ரீபன் லெச்சே(Stephen Lecce) அறிவித்தார்.இதேவேளை இணையவசதியற்ற மற்றும் தகுந்த தொழில்நுட்பங்களைக் கொண்டிராத மாணவர்களுக்கு இணையவழி கல்வியைக் கொண்டுசெல்லும் வகையிலும் மாகாண அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் லெச்சே தெரிவித்தார்.
அத்துடன் 12ம் ஆண்டு மாணவர்கள் எவ்வித தாமதமும் இன்றி ஏககாலத்தில் பட்டயச் சான்றிதழ்(Diploma Certificate) வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment