Skip to main content

ஓன்டாரியோவில் இணையவழி கல்வி நடவடிக்கை ஆரம்பம்


ஓன்டாரியோ பள்ளிக்கூட மாணவர்களுக்கு இணையவழி கல்வி நடவடிக்கை ஆரம்பம்

கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மார்ச் இரண்டாவது வாரம் முதல் மூடப்பட்டுள்ள ஒன்டாரியோ மாகாண பள்ளிக்கூடங்களுக்கு இணையவழி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.

இதன் பிரகாரம் இளமழலை(Kindergarten) வகுப்பு முதல் 06ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு பத்து மணித்தியால கற்றல் செயற்பாடுகளும் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ள.

உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாராந்தம் ஒவ்வொரு பாடங்களுக்கும் மூன்று மணிநேர கல்விச் செயற்பாட்டுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையின் ஊடாக மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் தரமுயர்த்தல் ஆகியன வழமை போன்று இடம்பெறும் என்று கல்வி அமைச்சர் ஸ்ரீபன் லெச்சே(Stephen Lecce) அறிவித்தார்.

இதேவேளை இணையவசதியற்ற மற்றும் தகுந்த தொழில்நுட்பங்களைக் கொண்டிராத மாணவர்களுக்கு இணையவழி கல்வியைக் கொண்டுசெல்லும் வகையிலும் மாகாண அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் லெச்சே தெரிவித்தார்.

அத்துடன் 12ம் ஆண்டு மாணவர்கள் எவ்வித தாமதமும் இன்றி ஏககாலத்தில் பட்டயச் சான்றிதழ்(Diploma Certificate) வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.