Skip to main content

பொலிவூட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்.

பொலிவூட் திரையுலகின் மூத்த பெரும் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக் குறைவால் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு அகவை 67 ஆகும்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நியூயோர்க்கில் சிகிச்சை பெற்று கடந்த செப்ரெம்பர் இறுதியில் இந்தியா திரும்பியிருந்தார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், முப்பை H N Reliance  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஏப்ரல் 30ம் நாள் வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1970ம் ஆண்டுகளில் அவரது தந்தை ராஜ் கபூருடன் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருந்த ரிஷிகபூர், 1973இல் பொபி திரைப்படத்தில் பதின்ம வயது இளைஞனாக தோன்றி நடித்தமை பெரும் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 1980, 1990 களில் நடித்த Khel Khel Mein, Karz ,Chandni போன்ற திரைப்படங்கள் பெரு வெற்றியை தேடிக் கொடுத்தது.
பொலிவூட் நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரன்பீர் கபூர்(பொலிவூட் நடிகர்) என்ற மகனும், ரிதிமா கபூர் என்ற மகளும் உள்ளனர்.

மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு திரையுலக்தினரும், அரசியற் பிரமுகர்களும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.