Skip to main content

தென்கொரியாவில் ஆளும் ஜனநாயக் கட்சி வெற்றி – பிந்திய வாக்குக் கணிப்பு

தென்கொரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பாண்மை வெற்றியை பெறும் என்று உத்தியோகப் பற்றற்ற முடிபுகள் வெளியாகியுள்ளன.

முக்கிய மூன்று உள்ளுர் தொலைக்காட்சிகள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், அந்நாட்டு அரசுத் தலைவர் மூன் ஜே-இன்னின் தலைமையிலான ஜனநாயக் கட்சி 300 ஆசனங்களைக் கொண்ட அரசவையில் குறைந்தது 177 ஆசனங்களைப் கைப்பற்றி பெரும்பாண்மை வெற்றியை ஈட்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

இத்தேர்தலில் போட்டியிட சுமார் 35 அரசியற் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தன. எனினும் ஆளும் ஜனநாயக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய பழமைவாத எதிர்காலக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.


பிந்திய கருத்துக் கணிப்பின் பிரகாரம் எதிர்க்கட்சி 131 ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிபுகள் 2022ல் நடைபெறப் போகும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றால் பாதிக்கப்பட்ட தென்கொரியாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 225 பேரும் மரணித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு;ள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் சுமார் ஒரு மீற்றர் இடைவெளியுடானான தூரத்தில் நின்று வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.