தென்கொரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பாண்மை வெற்றியை பெறும் என்று உத்தியோகப் பற்றற்ற முடிபுகள் வெளியாகியுள்ளன.
முக்கிய மூன்று உள்ளுர் தொலைக்காட்சிகள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், அந்நாட்டு அரசுத் தலைவர் மூன் ஜே-இன்னின் தலைமையிலான ஜனநாயக் கட்சி 300 ஆசனங்களைக் கொண்ட அரசவையில் குறைந்தது 177 ஆசனங்களைப் கைப்பற்றி பெரும்பாண்மை வெற்றியை ஈட்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது.
இத்தேர்தலில் போட்டியிட சுமார் 35 அரசியற் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தன. எனினும் ஆளும் ஜனநாயக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய பழமைவாத எதிர்காலக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
பிந்திய கருத்துக் கணிப்பின் பிரகாரம் எதிர்க்கட்சி 131 ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிபுகள் 2022ல் நடைபெறப் போகும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றால் பாதிக்கப்பட்ட தென்கொரியாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 225 பேரும் மரணித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு;ள்ளனர்.
ஒருவருக்கு ஒருவர் சுமார் ஒரு மீற்றர் இடைவெளியுடானான தூரத்தில் நின்று வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய மூன்று உள்ளுர் தொலைக்காட்சிகள் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம், அந்நாட்டு அரசுத் தலைவர் மூன் ஜே-இன்னின் தலைமையிலான ஜனநாயக் கட்சி 300 ஆசனங்களைக் கொண்ட அரசவையில் குறைந்தது 177 ஆசனங்களைப் கைப்பற்றி பெரும்பாண்மை வெற்றியை ஈட்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது.
இத்தேர்தலில் போட்டியிட சுமார் 35 அரசியற் கட்சிகள் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தன. எனினும் ஆளும் ஜனநாயக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய பழமைவாத எதிர்காலக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.
பிந்திய கருத்துக் கணிப்பின் பிரகாரம் எதிர்க்கட்சி 131 ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிபுகள் 2022ல் நடைபெறப் போகும் அரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கோவிட்-19 கொறொனா கொல்லுயிரி தொற்றால் பாதிக்கப்பட்ட தென்கொரியாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 225 பேரும் மரணித்துள்ளனர். அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு;ள்ளனர்.
ஒருவருக்கு ஒருவர் சுமார் ஒரு மீற்றர் இடைவெளியுடானான தூரத்தில் நின்று வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment