ஸ்ரீலங்காவில் காவற்துறை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் இன்று வியாழக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை, மீண்டும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருகிறது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணிமுதல் இரவு எட்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
எனினும் நாளை வெள்ளிகிழமை மே 01ம் நாள் தொழிலாளர் தின ஒன்று கூடல்களை தடுக்கும் வண்ணம் அமுலுக்கு கொண்டு வரப்படும் காவற்துறை ஊரடங்குச்சட்டம், திங்கட்கிழமை வரை நீடிக்கின்றது.
ஸ்ரீலங்காவில் இதுவரை 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்களில் ஏழு பேர் மரணித்தும் உள்ளனர்.
இதேவேளை, கடற்படையினர் 226 பேருக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் வெலிசறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினரெனவும், இதையடுத்து அந்தக் கடற்படைத் தளத்தில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுமுறையில் இருந்த 79 கடற்படையினருக்கும் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வழக்கறிஞர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் கூறியுள்ளார்.
மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டால், சமூகத்தில் தொற்றுப் பரவும் ஆபத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், பள்ளிக்கூடங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட மாட்டாவெனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் காலை 5 மணிமுதல் இரவு எட்டு மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
எனினும் நாளை வெள்ளிகிழமை மே 01ம் நாள் தொழிலாளர் தின ஒன்று கூடல்களை தடுக்கும் வண்ணம் அமுலுக்கு கொண்டு வரப்படும் காவற்துறை ஊரடங்குச்சட்டம், திங்கட்கிழமை வரை நீடிக்கின்றது.
ஸ்ரீலங்காவில் இதுவரை 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்களில் ஏழு பேர் மரணித்தும் உள்ளனர்.
இதேவேளை, கடற்படையினர் 226 பேருக்குக் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் வெலிசறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த கடற்படையினரெனவும், இதையடுத்து அந்தக் கடற்படைத் தளத்தில் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுமுறையில் இருந்த 79 கடற்படையினருக்கும் கொறோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
![]() |
| Lawyer Visvalingam Manivannan |
மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டால், சமூகத்தில் தொற்றுப் பரவும் ஆபத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், பள்ளிக்கூடங்களை தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பயன்படுத்தப்பட மாட்டாவெனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment