Skip to main content

பிற்போடப்பட்ட ஸ்ரீலங்காவின் பொதுத்தேல்தல் ஜூன் 20ம் நாள் நடைபெறும்.

ஸ்ரீலங்காவில் 16-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் 20ம் நாள் நடைபெறும் என்று விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தினால் ஏப்ரல் 25ம் நாள் நடைபெற தீர்மானித்திருந்த தேர்தலை பிற்போடப்படுவதாக, கடந்த மார்ச் 19ம் நாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில நாள் குறிப்பிட்டாமல் தேர்தலை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் அண்மையில் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் கோவிட்-19 தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை தேர்தலுக்கான நாள் குறித்த அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன.

இவ்வாறான ஓர் நிலையில் இன்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடி ஆராய்ந்தது.

இக்கலந்துரையாடலில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல், பேராசிரியர் நலின் அபேசேகர ஆகியோருடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகள், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதன் பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது ஜூன் 20ம் நாள் தேர்தலை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில், அரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வர்த்தமானி அறிவித்தலாக இன்று வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.