ஸ்ரீலங்காவில் 16-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் 20ம் நாள் நடைபெறும் என்று விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தினால் ஏப்ரல் 25ம் நாள் நடைபெற தீர்மானித்திருந்த தேர்தலை பிற்போடப்படுவதாக, கடந்த மார்ச் 19ம் நாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில நாள் குறிப்பிட்டாமல் தேர்தலை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் அண்மையில் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் கோவிட்-19 தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை தேர்தலுக்கான நாள் குறித்த அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன.
இவ்வாறான ஓர் நிலையில் இன்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடி ஆராய்ந்தது.
இக்கலந்துரையாடலில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல், பேராசிரியர் நலின் அபேசேகர ஆகியோருடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகள், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன் பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது ஜூன் 20ம் நாள் தேர்தலை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில், அரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வர்த்தமானி அறிவித்தலாக இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில நாள் குறிப்பிட்டாமல் தேர்தலை ஒத்திவைப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் அண்மையில் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் கோவிட்-19 தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை தேர்தலுக்கான நாள் குறித்த அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தன.
இவ்வாறான ஓர் நிலையில் இன்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடி ஆராய்ந்தது.
இக்கலந்துரையாடலில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ_ல், பேராசிரியர் நலின் அபேசேகர ஆகியோருடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகள், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.அதன் பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது ஜூன் 20ம் நாள் தேர்தலை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்ட நிலையில், அரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வர்த்தமானி அறிவித்தலாக இன்று வெளியாகியுள்ளது.


Comments
Post a Comment