படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் என்று அறியப்பட்ட மாமனிதர் தர்மரெட்ணம் சிவராமின் 15-வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தால் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகத்தினரும், மனித நேயச் செயற்பாட்டாளர்களும் முடக்கம் அடைந்துள்ள நிலையில், மாமனிதர் தராக்கி சிவராம் அமைதியாக நினைவு கூரப்படுகிறார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில், கொழும்பு பம்பலப்பிட்டி காவற்துறை நிலையத்துக்கு முன்பாக வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உடல், மறுநாள் காலை ஸ்ரீலங்காவின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக நடாளுமன்றின் பின்புறமாகவுள்ள வீதியோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
உடலில் பலத்த இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட அவரது உடலை, சக ஊடகவியலாளர்களும், அவரது குடும்பத்தினரும் அடையாளம் காண்பித்தனர்.
இப்படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
1959ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் நாள் மட்டக்களப்பில் பிறந்த தர்மரெட்ணம் சிவராம், பின்னர் ஊடகத்துறையில் தராக்கி என்ற பெயரில் நன்கு அறியப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இவரின் இராணுவ புலனாய்வுகள் குறித்த கட்டுரைகள், தீர்க்க தரிசனமாக அமைந்தது.
விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் ஆய்வுகளையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியது மட்டும் அன்றி, காலத்தின் தேவைக்கு ஏற்றாற் போல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாதிக்கத் தேவையை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நன்கு உணர்த்தியவர், தராக்கி சிவராம்.
"The rights we enjoy today aren't earned by speaking, we earned them by fighting", அதாவது நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என்று
2005ம் ஆண்டு காலப்பகுதியில் தினக்குரலுக்கு எழுதிய ஓர் கட்டுரையில் தராக்கி சிவராம் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஊடகர்கள் கொல்லப்படலாம் இடப்பெயர்வுக்கு தள்ளப்படலாம் ஆனால் அவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டவை என்றும் அழியாது, காலத்தின் தேவையாய் அவை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தாக்கத்தால் தாயகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் தமிழ் ஊடகத்தினரும், மனித நேயச் செயற்பாட்டாளர்களும் முடக்கம் அடைந்துள்ள நிலையில், மாமனிதர் தராக்கி சிவராம் அமைதியாக நினைவு கூரப்படுகிறார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் நாள் வியாழக்கிழமை இரவு 10.30 அளவில், கொழும்பு பம்பலப்பிட்டி காவற்துறை நிலையத்துக்கு முன்பாக வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உடல், மறுநாள் காலை ஸ்ரீலங்காவின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக நடாளுமன்றின் பின்புறமாகவுள்ள வீதியோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
உடலில் பலத்த இரத்தக் காயங்களுடன் காணப்பட்ட அவரது உடலை, சக ஊடகவியலாளர்களும், அவரது குடும்பத்தினரும் அடையாளம் காண்பித்தனர்.
இப்படுகொலை இடம்பெற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இப்படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
1959ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் நாள் மட்டக்களப்பில் பிறந்த தர்மரெட்ணம் சிவராம், பின்னர் ஊடகத்துறையில் தராக்கி என்ற பெயரில் நன்கு அறியப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் இவரின் இராணுவ புலனாய்வுகள் குறித்த கட்டுரைகள், தீர்க்க தரிசனமாக அமைந்தது.
விடுதலைப் போராட்டங்கள் தொடர்பாகவும், அரசியல் ஆய்வுகளையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியது மட்டும் அன்றி, காலத்தின் தேவைக்கு ஏற்றாற் போல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாதிக்கத் தேவையை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் நன்கு உணர்த்தியவர், தராக்கி சிவராம்.
"The rights we enjoy today aren't earned by speaking, we earned them by fighting", அதாவது நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என்று
2005ம் ஆண்டு காலப்பகுதியில் தினக்குரலுக்கு எழுதிய ஓர் கட்டுரையில் தராக்கி சிவராம் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஊடகர்கள் கொல்லப்படலாம் இடப்பெயர்வுக்கு தள்ளப்படலாம் ஆனால் அவர்களால் வெளிக்கொண்டுவரப்பட்டவை என்றும் அழியாது, காலத்தின் தேவையாய் அவை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்.



Comments
Post a Comment