கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று கடுமையான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்றிரவு (திங்கட்கிழமை) அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.
கொறொனா தொற்று அறிகுறி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 55 அகவையுடைய ஜோன்சன், பதினொரு நாட்களின் பின்னரும் காய்ச்சல் மாறாத நிலையில் ஞாயிறு இரவு சென்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பிரகாரம், அவர் நேற்றிரவு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு ஒக்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று திங்கட்கிழமை இரவு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று த கார்டியன் தெரிவிக்கிறது.
இந்நிலையில் முக்கிய பொறுப்புக்களை கவனிக்கும் பொறுப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் செயலாளர் டொமினிக் றாட்டிடம் ( Dominic Raab ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர்( Keir Starmer), இது மிகுந்த சோகமான செய்தி என்று கூறினார்.
இதேவேளை ஜோன்சனின் தேக ஆரோக்கியம் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அக்கறை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறே அமெரிக்கர்கள் அனைவரும் ஜோன்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் தெரிவி;த்துள்ளார்.
இதேபோன்று பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஜோன்சனின் உடல்நலம் குறித்து கரிசனை வெளியிட்டு வருகின்றனர்.
கொறொனா தொற்று அறிகுறி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 55 அகவையுடைய ஜோன்சன், பதினொரு நாட்களின் பின்னரும் காய்ச்சல் மாறாத நிலையில் ஞாயிறு இரவு சென்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பிரகாரம், அவர் நேற்றிரவு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு ஒக்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.
நேற்று திங்கட்கிழமை இரவு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று த கார்டியன் தெரிவிக்கிறது.
இந்நிலையில் முக்கிய பொறுப்புக்களை கவனிக்கும் பொறுப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் செயலாளர் டொமினிக் றாட்டிடம் ( Dominic Raab ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர்( Keir Starmer), இது மிகுந்த சோகமான செய்தி என்று கூறினார்.
இதேவேளை ஜோன்சனின் தேக ஆரோக்கியம் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அக்கறை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறே அமெரிக்கர்கள் அனைவரும் ஜோன்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் தெரிவி;த்துள்ளார்.
இதேபோன்று பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஜோன்சனின் உடல்நலம் குறித்து கரிசனை வெளியிட்டு வருகின்றனர்.


Comments
Post a Comment