Skip to main content

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரித்தானியப் பிரதமர்.

கோவிட்-19 கொறொனா வைரஸ் தொற்று கடுமையான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேற்றிரவு (திங்கட்கிழமை) அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.

கொறொனா தொற்று அறிகுறி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 55 அகவையுடைய ஜோன்சன், பதினொரு நாட்களின் பின்னரும் காய்ச்சல் மாறாத நிலையில் ஞாயிறு இரவு சென்ட் தோமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


சுவாசப் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ ஆலோசனையின் பிரகாரம், அவர் நேற்றிரவு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு ஒக்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை இரவு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று த கார்டியன் தெரிவிக்கிறது.

இந்நிலையில் முக்கிய பொறுப்புக்களை கவனிக்கும் பொறுப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் செயலாளர் டொமினிக் றாட்டிடம் ( Dominic Raab ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர்( Keir Starmer), இது மிகுந்த சோகமான செய்தி என்று கூறினார்.

இதேவேளை ஜோன்சனின் தேக ஆரோக்கியம் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அக்கறை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறே அமெரிக்கர்கள் அனைவரும் ஜோன்சன் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் தெரிவி;த்துள்ளார்.

இதேபோன்று பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஜோன்சனின் உடல்நலம் குறித்து கரிசனை வெளியிட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...