ஒன்றாரியோவில் கோவிட் 19 மீண்டும் உயர்வு – காரணம் கட்டுப்பாடுகளின் தளர்வா?
ஒன்றாரியோவில் இன்று 361 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளன. நேற்று 308 தொற்றுகள் பதிவாகியிருந்தன.
கடந்த ஆறு வாரங்களில் முதல்முறையாகச் சரிவைச் சந்தித்துவரும் இந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை ஏறுவதுவும் இறங்குவதுவுமாக இருந்து வருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றுக் காரணமாக 56 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1776 ஆகும்.
இந்த நோய் படிப்படியாகக் குறைத்து செல்வது எளிதான காரியம் அல்ல, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருக்கின்றன. இவை சிலவேளை தொற்று எண்ணிக்கை உயர்வை அதிகரிக்கலாம். கணிசமான அளவு நோய் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டால் மீண்டும் நாம் கட்டுப்பாடுகளை இறுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்' எனத் தொற்றுநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த வாரத்தில் சராசரியாக 378 புதிய தொற்றுகள் காணப்பட்டுள்ளன. இது நம்பிக்கையளிப்பதாகக் கூறப்படுகின்றது.
தொற்று நோய் தொடர்பான சோதனை 19,577 என்ற உச்சத்தில் இருந்து குறைவடைய தொடங்கியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 ஆயிரத்து 979 பேர் மட்டுமே சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை வீழ்ச்சி, கொரோனா ஒன்றாரியோவில் குறைவடைந்து வருகின்றது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு என்கின்றனர்.
சுகாதாரப் பணியாளர்களிடையே இப்போது 3,485 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
ரொரன்ரோ பெரும்பாகத்தில் மட்டும் 62.1 வீதமான தொற்றுகள் உள்ளன.
மருத்துவமனைகளில் 73 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 2,650 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது மொத்த எண்ணிக்கையில் 12.7 சதவீதமாகும்.
20 முதல் 39 வயதிற்குட்பட்டவர்களில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன, 19 வயதிற்குட்பட்டவர்களில் எந்த இறப்புகளும் பதிவாகவில்லை.


Comments
Post a Comment