கோவிட் 19 நுண்மித் தொற்றால் மே 2ம் திகதிக்குப் பின் இன்று ஒன்ராரியோவில் அதிக எண்ணிக்கையாக 477 தொற்றுக்கள் பதிவாகியுள்ன. இவ்வாரம் மாகாண அரசு சில கட்டுப்பாடுகளை நீக்கியதன் பின்னர், இன்றே அதிக அளவான எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்றாரியோவில் 19,598 பேர் இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13,990 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றாரியோவில் 1540 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளனர்.
இவ்வாரம் தோட்ட மையங்கள் உட்பட பல பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. இவை சிலவேளை தொற்று அதிகரிப்புகளுக்குக் காரணமாகலாம் எனக் கருதப்பட்டாலும் மருத்துவத்துறை மற்றும் பாதுகாப்பு என்பன வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் இந்த சவால்களை எம்மால் எதிர்கொள்ள முடியும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
ஒன்றாரியோவில் கோவிட் 19 உச்சத்தைக் கடந்துவிட்டது எனக் கருதியாலும் நாள்தோறும் சராசரியாக 426 பேர் இத்தொற்றால் பாதிக்ப்படுகின்றனர்.


Comments
Post a Comment