
கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் ஒன்டாரியோ அரசால் மார்ச் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நடைமுறைச் சட்டம் யூன் 2 ம் திகதிவரைநீடிக்கப்படுகிறது
மாகாண அரசின். மேலாண்மை , சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இச்சட்டம் இன்று ஒன்றாரியோ சட்டப் பேரவையில் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.
மாகாண அரசின். மேலாண்மை , சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இச்சட்டம் இன்று ஒன்றாரியோ சட்டப் பேரவையில் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்றுநோய்யைக் பெருமளவில் கட்டுப்படுத்துவதற்குரிய ஆற்றலை மாகாணம் உறுதிப்படுத்தும் நோக்கிலும் தொடர்ந்தும் படிப்படியாக வணிகங்கள். சேவைகளையும் திறக்கும் நோக்குடனும் இது நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நீடிப்பானது, தற்போதைய அவசரகால நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவும் சிறப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உதவும்.
ஓய்வூதியம் மற்றும் நீண்டகால பராமரிப்பு இல்ல ஊழியர்கள் அதிக அளவில் பணியாற்றுவதை இச்சட்டம் தடுக்கின்றது. 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவதை இது தடை செய்கின்றது. அவசரகால சட்டத்தின் கீழ் 150 நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Comments
Post a Comment