Skip to main content

ஒன்றாரியோ மீள்கின்றது: புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 258

ஒன்றாரியோ மீள்கின்றது: புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 258
ஆறு வாரங்களுக்குப் பின் ஆகக் குறைந்த எண்ணிக்கையாக 258 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
 
கடந்த ஏப்ரல் 25 திகதி அதிகூடிய நாளாந்த எண்ணிக்கையாக 640 காணப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியது. எனினும் ஏற்ற இறக்கமாகக் காணப்பட்ட நாளாந்தப் பரவல் அண்மை நாட்களாகக் கணிசமாகக் குறைவடைய ஆரம்பித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று குறைந்த எண்ணிக்கை அவதானிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 346 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டிருந்தன. இந்த வாரத்தில் 300 குறைந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தும் இரண்டாவது நாள் இதுவாகும். 

ஒன்ராறியோவின் நலத்துறை நடுவத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இது மிக விரைவான கீழ்நோக்கிய போக்கு அல்ல. இத்தொற்று வீழ்ச்சியுறாத போக்கினையே நாம் காண்கின்றோம் எனக் கூறியிருந்தார். நாம் வழமை நிலைக்குத் திரும்புவதற்கு எண்ணிக்கையின் அளவு மேலும் குறைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த 24 மணிநேரத்தில் 33 இறப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பின் இறப்பு எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. 
ஒன்றாரியோவில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1,798 ஆகும்.
நேற்று புதன்கிழமை 17,429 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 1.5 வீதத்தினரே தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 

மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைப் பொறுத்தவரை, அவை ஒரு நாளுக்கு முன்பே ஒப்பீட்டளவில் நிலையானவை.

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் தற்போது தொற்றுக்கு உள்ளான 1,026 நோயாளிகள் உள்ளனர், இதில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் 184 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றது. 

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...