Skip to main content

அமெரிக்காவில் 33.3 மில்லியன் மக்கள் வேலை இழப்பு

அமெரிக்காவில் 33.3 மில்லியன் மக்கள் வேலை இழப்பு 

U.S. unemployment rate passes 20% with 4.4 million weekly jobless ...
கொரோனா நுண்மித் தொற்று அமெரிக்காவின் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு வேலை இழந்தோர் எண்ணிக்கை 33.3 மில்லியனை எட்டியுள்ளது. இது அண்மைக்கால அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய தொகையாகக் கருதப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணியாளர் பலத்தின் 20 வீதமாகும். 
இதுவரை வேலையிழந்த 3.2 மில்லியன் மக்கள் அரசின் உதவித்தொகைப் பெற்றுள்ளனர். 

வேலையிழந்தோர் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் 6.9 வீதமாக இருந்து இப்போது குறைவடைந்துள்ளது எனினும் இந்த நிலைமை அசாதாரணமானது என்றே கருதுகின்றனர். 

நாட்டின் சில பகுதிகள் வழமைக்குத் திரும்புகின்றன என்ற போதிலும் வேலை இழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. 
கடந்த வாரங்களில் Uber, Lyft,  Airbnb போன்ற பயண நிறுவனங்கள் தமது பணிகளை முடக்கியுள்ளமையும் வேலை இழப்புக்குக் காரணமாக அமைகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொற்று நோய் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்திராத பாரிய பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. 
நாளை வெள்ளிக்கிழமை வெளியாகும் வேலையின்மை பற்றிய அறிக்கையில் வேலையின்மை வீதம் 15 வீதத்தால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது. 


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.