அமெரிக்காவில் 33.3 மில்லியன் மக்கள் வேலை இழப்பு

கொரோனா நுண்மித் தொற்று அமெரிக்காவின் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு வேலை இழந்தோர் எண்ணிக்கை 33.3 மில்லியனை எட்டியுள்ளது. இது அண்மைக்கால அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய தொகையாகக் கருதப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணியாளர் பலத்தின் 20 வீதமாகும்.
இதுவரை வேலையிழந்த 3.2 மில்லியன் மக்கள் அரசின் உதவித்தொகைப் பெற்றுள்ளனர்.
வேலையிழந்தோர் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் 6.9 வீதமாக இருந்து இப்போது குறைவடைந்துள்ளது எனினும் இந்த நிலைமை அசாதாரணமானது என்றே கருதுகின்றனர்.
நாட்டின் சில பகுதிகள் வழமைக்குத் திரும்புகின்றன என்ற போதிலும் வேலை இழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது.
கடந்த வாரங்களில் Uber, Lyft, Airbnb போன்ற பயண நிறுவனங்கள் தமது பணிகளை முடக்கியுள்ளமையும் வேலை இழப்புக்குக் காரணமாக அமைகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று நோய் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்திராத பாரிய பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்தித்து வருகின்றது.
நாளை வெள்ளிக்கிழமை வெளியாகும் வேலையின்மை பற்றிய அறிக்கையில் வேலையின்மை வீதம் 15 வீதத்தால் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
Comments
Post a Comment