Skip to main content

நேற்றைய எண்ணிக்கைக் கணிப்பில் தவறு? இன்றைய அதிகரிப்பு 428

நேற்றைய எண்ணிக்கைக் கணிப்பில் தவறு? இன்றைய அதிகரிப்பு 428

Add caption

நேற்று வெளியான 258 என்ற கோவிட் 19 தொற்று எண்ணிக்கை தவது என ஒன்றாரியோ நலத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது. 87 புதிய தொற்றுகள் நேற்றைய எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. நேற்றைய சரியான எண்ணிக்கை 345 ஆகும். 

இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட தொற்று எண்ணிக்கை 341 ஆகும். இத்துடன் நேற்றுத் தவறவிடப்பட்ட 87 என்ற எண்ணிக்கையையும் சேர்த்து 428 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று வெளியான எண்ணிக்கை நம்பிக்கையைத் தூண்டுவதாக இருந்தது. விரைவில் மக்கள் வழமைக்குத் திரும்பலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த எண்ணிக்கைத் தவறு சற்று பின்னடைவையே காட்டுகின்றது. 

கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 339 புதிய தொற்றுகள்; மாகாணத்தில் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களும் நம்பிக்கை தரும் வீழ்ச்சியைக் காட்டவில்லை.  

கடந்த 24 மணி நேரத்தில் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ராறியோ மாகாணத்தில் இதுவரை 1>825 பேர் இறந்துள்ளனர். 

மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 21>922 தொற்றுகளில் கிட்டத்தட்ட 76 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.