தொற்று எண்ணிக்கை இன்று மீண்டும் குறைந்தது. இன்று புதிதாகத் தொற்றுகளுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 421 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய எண்ணிக்கையை விட இது குறைவானதாகும். இத்துடன் ஒன்ராறியோவில் பாதிக்கப்பட்டவர்களி;ன் எண்ணி;க்கை 16,608 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆகக் கூடிய எண்ணிகையாக 89 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.
தொற்றுக்கு ஆளான நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 10,825 நோயாளர்கள் குணமாகியுள்ளனர். குணமடைவோர் வீதம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாக மருத்துவத் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 620 பேர் குணமடைந்துள்ளனர்.
நோய்த்தொற்றின் பரவல் குறைவடைவதை நாம் அவதானிக்கின்றோம். மீண்டும் வழமையான வாழ்வுக்குத் திருப்புவதை நாம் நெருங்கிச் செல்கின்றோம் என இன்று ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் கொரோனா தொற்நுக் காரணமாக இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 1,121 பேரில் 56 பேரைத் தவிர மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களில் 774 பேர் 80 வயதைக் கடந்தவர்கள்.
மாகாணத்தின் நீண்டகால பராமரிப்பு மையங்களில் 198 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்ராறியோவில் 2,400 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தப் பாதிப்பில் 60 சதவீதம் ரொரன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை கணிப்பின்படி 1,017 அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 225 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Comments
Post a Comment