
ஒன்றாரியோவில் சில வணிக நிறுவனங்கள் திங்கள் திறப்பு
வரையறுக்கப்பட்ட வணிக மையங்கள் பலவற்றை மே 4ம் திகதி திங்கட்கிழமை திறப்பதற்கு மாகாண அரசு அனுமதித்துள்ளது.
விவசாயம், பூமரங்கள் தொடர்பான வணிகங்கள், புல்வெளி; பராமரிப்பு நிறுவனங்கள்; வாகன விற்பனை மையங்கள் உட்பட பல வணிக மையங்கள் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன.
இன்று இந்த அறிபிப்பை ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் வெளியிட்டார்.
"நோய் தொடர்பில் நாம் கையாண்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையிலும் எங்களிக் பலமான மருத்துவத்துறை, சமூக நலத்துறை சார்ந்த செயற்பாடுகளிலும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் நாம் பாதுகாப்பாக இயங்க முடியும் என நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் நெருக்க இடைவெளிகளைப் பேணுதல் வேண்டும். கையுறை சுவாசத் தடுப்புக் கவசம் போன்றவற்றைத் தொடர்ந்து அணிந்திருத்தல் வேண்டும். இவற்றைக் ககடைப்பிடித்தால் தொடுகை மூலம் தொடர்பற்ற சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய கட்டுமானப் பணிகளின் பட்டியலையும் மாகாணம் விரிவுபடுத்தியுள்ளது, இதில் இப்போது நகராட்சி திட்டங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், குழந்தை பராமரிப்பு மையங்கள், பள்ளிகள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளை இனி முன்னெடுக்கலாம். கோல்ஃப் மைதானங்கள், விளையாட்டுத் திடல்கள் எதிர்வரும் கோடைகாலத்தில் திறக்க அனுமதிக்கப்படும்.
ஒன்ராறியோவின் சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்த பின்னரே திறக்கக்கூடிய புதிய வணிகங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
திறக்கப்படவிருக்கும் வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment