ஒன்றாரியோவில் தொற்று எண்ணிக்கை தொடர் வீழ்ச்சி!
கடந்த 24 மணி நேரத்தில் ஒன்றாரியோவில் கோவிட் 19 கொறோனா நுண்மி தொடர்பான 294 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் வெளியான நாளாந்த தொற்று எண்ணிக்கையில் இதுவே ஆகக்குறைந்த எண்ணிக்கையாகும்.

நேற்றைய நாள் 346 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டிருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 294 ஆக குறைந்துள்ளது. இறுதியாக மார்ச் 31ஆம் திகதி 260 தொற்றுகள் பதிவாகியிருந்தன. ஒன்றாரியோ மாகாணத்தில் நாளாந்த சோதனைகளின் அளவு அதிகரித்திருக்கின்றது. நேற்றைய நாள் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடைபெற்றிருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை 19,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதோடு இழப்புகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு வீழ்ச்சியைக் கண்டிருக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 35 புதிய இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த புதிய எண்ணிக்கை தொடர்ந்து மாகாணத்தில் இதுவரை 20 ஆயிரத்து 238 தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன .இதில் ஆயிரத்து 634 இறப்புகளும் 14 ஆயிரத்து 772 குணமடைந்தோர் எண்ணிக்கையும் அடங்கும்.
நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பராமரிப்பு இல்லங்களில் 239 பேர் இந்த நோயினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Comments
Post a Comment