Skip to main content

பூங்காக்கள் பாரம்பரிய பார்வைத் தளங்கள் படிப்படியாகத் திறக்கப்படும்.

பூங்காக்கள் பாரம்பரிய பார்வைத் தளங்கள் படிப்படியாகத் திறக்கப்படும்


கோவிட் 19 தாக்கத்தில் இருந்து கனடா மெல்லமெல்ல மீண்டுவரத் தொடங்கியிருக்கின்றது. இதையடுத்து மத்திய பூங்கா தேசிய பூங்காக்கள், பாரம்பரிய சுற்றுலாத் தளங்களைப் படிப்படியாக மீண்டும் திறக்கும் திட்டத்தை இன்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. 

கோவிட் 19 தொற்றுப் பரவலையடுத்து அனைத்து தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 

இந்த இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னரே இவற்றைப் படிப்படியாகத் திறப்பது குறித்த திட்டம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிப்படியாகத் திறக்கப்படும் திட்டத்தின் கீழ் 38 பூங்காக்கள் மற்றும் 171 வரலாற்று தளங்கள் உள்ளன, இதில் கலங்கரை விளக்கங்கள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன உள்ளடங்குகின்றன. மைய அரசு இவற்றைப் பராமரித்து வருகின்றது. 

எனினும் வரவிருக்கும் வார இறுதியில் இவை திறக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.