பூங்காக்கள் பாரம்பரிய பார்வைத் தளங்கள் படிப்படியாகத் திறக்கப்படும்
கோவிட் 19 தாக்கத்தில் இருந்து கனடா மெல்லமெல்ல மீண்டுவரத் தொடங்கியிருக்கின்றது. இதையடுத்து மத்திய பூங்கா தேசிய பூங்காக்கள், பாரம்பரிய சுற்றுலாத் தளங்களைப் படிப்படியாக மீண்டும் திறக்கும் திட்டத்தை இன்று மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.
கோவிட் 19 தொற்றுப் பரவலையடுத்து அனைத்து தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று தளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இந்த இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னரே இவற்றைப் படிப்படியாகத் திறப்பது குறித்த திட்டம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாகத் திறக்கப்படும் திட்டத்தின் கீழ் 38 பூங்காக்கள் மற்றும் 171 வரலாற்று தளங்கள் உள்ளன, இதில் கலங்கரை விளக்கங்கள், கோட்டைகள், கால்வாய்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன உள்ளடங்குகின்றன. மைய அரசு இவற்றைப் பராமரித்து வருகின்றது.
எனினும் வரவிருக்கும் வார இறுதியில் இவை திறக்கப்படும் என எதிர்பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment