ஒன்ராறியோவில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த இரண்டு நாட்களாக 300க்கும் குறைவாகக் காணப்பட்ட நாளாந்தத் தொற்று எண்ணிக்கை இன்று 383 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோவில் நேற்று 292 புதிய தொற்றுகள் பதிவாகியிருந்தன. அதற்கு முதல் நாள் 287 தொற்றுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இன்று திடீரென கணிசமான அளவு அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
நோய் அதிகரிப்பு வீதம் ஆறு> ஏழு என்ற சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நீண்டகாலத்தின் பின் ஏற்பட்ட குறைந்த வீதமாகும் என டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்றைய தரவுகளின்படி> நேற்று 24 மணிநேர காலப்பகுதியில் 17>615 சோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த சில நாட்களை விட இது அதிகமானதாகும்.
ஒன்ராறியோ இன்று; 34 இறப்புகளை அறிவித்துள்ளது. இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 2>189ஆக உயர்ந்துள்ளது.
ஒன்ராறியோவில் இதுவரை 26>866 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20>673 குணமடைந்துள்ளனர்.

Comments
Post a Comment