ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து பதினெட்டாக(2018) உயர்வடைந்ததாக பொதுச் சுகாதார திணைக்களத் தகவல்கள் காட்டுகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் 390 தொற்றுகள் இனம் காணப்பட்ட நிலையில், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 774 ஆக உயர்வடைந்தது.
அத்துடன் நேற்றைய தினம் பதிவான 43 இறப்புக்களுடன் மொத்தமான 2018 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 76.5 சதவீதமான 18 ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுக்கள் குறித்து நாளார்ந்தம் 16 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது என்ற இலக்கு நேற்றைய தினமும் எட்டப்படவில்லை. சுமார் 7 ஆயிரத்து 382 பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஏற்பட்ட 43 இழப்புக்களில் 33 நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் ஒன்றாரியோவில் இதுவரை பதிவான மரணங்களில் 74 சதவீதமான 1500 இழப்புக்கள் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளன.
பிந்திய பதிவுகளின் படி கனடாவில் கொறோனா தொற்றால் 80 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 40,361 பேர் குணமடைந்தும் 6,028 பேர் மரணித்தும் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 390 தொற்றுகள் இனம் காணப்பட்ட நிலையில், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 774 ஆக உயர்வடைந்தது.
அத்துடன் நேற்றைய தினம் பதிவான 43 இறப்புக்களுடன் மொத்தமான 2018 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 76.5 சதவீதமான 18 ஆயிரத்து 190 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுக்கள் குறித்து நாளார்ந்தம் 16 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது என்ற இலக்கு நேற்றைய தினமும் எட்டப்படவில்லை. சுமார் 7 ஆயிரத்து 382 பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஏற்பட்ட 43 இழப்புக்களில் 33 நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் ஒன்றாரியோவில் இதுவரை பதிவான மரணங்களில் 74 சதவீதமான 1500 இழப்புக்கள் நீண்டகால மருத்துவப் பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்டுள்ளன.
பிந்திய பதிவுகளின் படி கனடாவில் கொறோனா தொற்றால் 80 ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 40,361 பேர் குணமடைந்தும் 6,028 பேர் மரணித்தும் உள்ளனர்.


Comments
Post a Comment