கனடிய அரசால் குறைந்த வருமானமுடைய குடும்பத்தினரின் பிள்ளைகளின் தேவைக்காக மத்திய அரசால் வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, கோவிட்-19 இடர்காலக் கொடுப்பனவாக தலா முன்னூறு டொலர் வழங்கப்படவுள்ளது.
Canada Child Benefit எனப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, பிள்ளை ஒன்றுக்கு முன்னூறு டொலர், அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடியர்களின் வருமானம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடக்கடைந்துள்ள நிலையில், மத்திய அரசால் இடர்கால கொடுப்பனவுகளுடன் மேலதிகமான தற்காலிகமாக இப்பணம் வழங்கப்படும் என்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த மார்ச்சில் அறிவித்திருந்தார்.
தற்காலிக கொடுப்பனவாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு காலத்திற்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று வரையறுக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், இணையவழி மூலமான சுகாதார சேவைகளுக்காக மத்திய அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலரை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் ரூடோ குறிப்பிட்டார்.
இந்த கோவிட்-19 தொற்றுக் காலத்தில், உளநலம் சார்ந்த உதவிகள் மற்றும் வீடுகளில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை இணைய வழிமுறையூடாக மருத்துவர்கள் கண்காணிக்கும் வகையிலான இந்த இணையவழி சுகாதார சேவைகளுக்கு (virtual platforms for mental health and primary care ) இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Canada Child Benefit எனப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, பிள்ளை ஒன்றுக்கு முன்னூறு டொலர், அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடியர்களின் வருமானம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடக்கடைந்துள்ள நிலையில், மத்திய அரசால் இடர்கால கொடுப்பனவுகளுடன் மேலதிகமான தற்காலிகமாக இப்பணம் வழங்கப்படும் என்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த மார்ச்சில் அறிவித்திருந்தார்.
தற்காலிக கொடுப்பனவாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு காலத்திற்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று வரையறுக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், இணையவழி மூலமான சுகாதார சேவைகளுக்காக மத்திய அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலரை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் ரூடோ குறிப்பிட்டார்.
இந்த கோவிட்-19 தொற்றுக் காலத்தில், உளநலம் சார்ந்த உதவிகள் மற்றும் வீடுகளில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை இணைய வழிமுறையூடாக மருத்துவர்கள் கண்காணிக்கும் வகையிலான இந்த இணையவழி சுகாதார சேவைகளுக்கு (virtual platforms for mental health and primary care ) இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment