Skip to main content

கோவிட்-19 - கனடியர்களுக்கு நிவாரணத் திட்டங்களை அறிவிக்கும் பிரதமர் ரூடோ

கனடிய அரசால் குறைந்த வருமானமுடைய குடும்பத்தினரின் பிள்ளைகளின் தேவைக்காக மத்திய அரசால் வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, கோவிட்-19 இடர்காலக் கொடுப்பனவாக தலா முன்னூறு டொலர் வழங்கப்படவுள்ளது.

Canada Child Benefit  எனப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, பிள்ளை ஒன்றுக்கு முன்னூறு டொலர், அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் கனடியர்களின் வருமானம் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடக்கடைந்துள்ள நிலையில், மத்திய அரசால் இடர்கால கொடுப்பனவுகளுடன் மேலதிகமான தற்காலிகமாக இப்பணம் வழங்கப்படும் என்று பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கடந்த மார்ச்சில் அறிவித்திருந்தார்.

தற்காலிக கொடுப்பனவாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எவ்வளவு காலத்திற்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று வரையறுக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, அடுத்த மாதக் கொடுப்பனவுடனும் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அத்துடன், இணையவழி மூலமான சுகாதார சேவைகளுக்காக மத்திய அரசாங்கம் மில்லியன் கணக்கான டொலரை ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் ரூடோ குறிப்பிட்டார்.

இந்த கோவிட்-19 தொற்றுக் காலத்தில், உளநலம் சார்ந்த உதவிகள் மற்றும் வீடுகளில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை இணைய வழிமுறையூடாக மருத்துவர்கள் கண்காணிக்கும் வகையிலான இந்த இணையவழி சுகாதார சேவைகளுக்கு (virtual platforms for mental health and primary care ) இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...