ஒன்றாரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 391 கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதாக பிந்திய புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை பதிவான 341 தொற்றுக்களில் இருந்து 1.8 சதவீத அதிகரிப்பை பிந்திய பதிவு காட்டுகின்றது.
இதன் பிரகாரம் 22 ஆயிரத்து 313 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1720 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் ஒன்றாரியோவில் ஏற்பட்ட 33 இறப்புக்களுடன் இத்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1858 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் பதிவாகியுள்ள தொற்றுக்களில் 57.1 சதவீதமானோர் பெண்கள் என்றும், 42.2 சதவீதமானோர் ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கனடாவில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75,963 ஆக பதிவாகியது. இவர்களில் 36,908 பேர் குணமடைந்துள்ளதுடன், 5680 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பதிவான 341 தொற்றுக்களில் இருந்து 1.8 சதவீத அதிகரிப்பை பிந்திய பதிவு காட்டுகின்றது.
இதன் பிரகாரம் 22 ஆயிரத்து 313 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1720 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் ஒன்றாரியோவில் ஏற்பட்ட 33 இறப்புக்களுடன் இத்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1858 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் பதிவாகியுள்ள தொற்றுக்களில் 57.1 சதவீதமானோர் பெண்கள் என்றும், 42.2 சதவீதமானோர் ஆண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கனடாவில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75,963 ஆக பதிவாகியது. இவர்களில் 36,908 பேர் குணமடைந்துள்ளதுடன், 5680 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.


Comments
Post a Comment