கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றினால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபதினாயிரத்தைக் கடந்துள்ளது.இன்று மதியம் கடந்து ஒரு மணிவரையான புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இதுவரை சுமார் அறுபதினாயிரத்து அறுநூற்றுப் நாற்பத்தொன்பது (60,649) பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.
இவர்களில் 25,760 பேர் குணமடைந்தும், 3850பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
ஓன்டாரியோவில் இன்றைய தினம் புதிதாக 370 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சி நிலையானது, மாகாண அரசால் கொறோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட இறுக்க நிலைகளில் தளர்வை கொண்டுவரும் முதற்கட்ட நடவடிக்கைக்கு சாதகமான நிலையைக் காட்டுக்கின்றது.
இன்றைய தினம் பதிவாகிய 84 மரணங்களுடன் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1359 ஆக உயர்வடைந்தது.
அத்துடன் இன்று பதிவாகிய 370 புதிய தொற்றுக்களுடன் மொத்தம் 17,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 12,505 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1010 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 984 ஆக காணப்படுகின்றது.
கனடிய மாகாண, பிரதேச வாயிலாக கோவிட்-19 தொற்றுக்கள் இவ்வாறு காணப்படுகின்றன.
இதேவேளை கனடியச் சிறைகளில் கொறோனா தொற்றுக்களும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களும் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகின்றன.
சிறைச்சாலைகளில் இதுவரை 290 கைதிகளுக்கு கொறோனா தொற்றியதாகவும், 155 பேர் பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கம் இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment