Skip to main content

கோவிட்-19 கனடா: தொற்று நீக்கிகளை கையாள்வதில் தவறு இழைக்கப்படுகிறது.

கோவிட் 19 கொறோனா நுண்மி பெரும்பரவுகையை கட்டுப்படுத்தும் வண்ணம் Bleach, Chlorine உள்ளிட்ட தொற்று நீக்கிகளை கையாள்வதில் கனடியர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபெப்ரவரி மார்ச்சில் போன்ற தொற்று நீக்கிகளால் ஏற்பட்ட நச்சுத் தன்மையுடனான சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட கனடியர்களின் வீதம் சுமார் 38 சதவீதமாக அதிகரித்தாக  புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நீக்கியாகவும் துப்பரவுக்காக வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து சிறார்களின் விடயத்தில் அதிக கவனம் தேவை என்று கனடிய சுகாதார அமைப்பு அறவுறுத்தியுள்ளது.

இதேவேளை கொறோனா நுண்மித் தொற்றினால் கனடாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அறுபத்திரெண்டாயிரத்து நாற்பத்தாறாக(62,046) உயர்வடைந்துள்ளது.

இத்தொற்றினால் இதுவரை 4043 பேர் மரணித்துள்ளதோடு 26,993 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

ஒன்றாரியோவில் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 387 பேருடன் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18,310 ஆக உயர்வடைந்தது.

மரணமானோரின் எண்ணிக்கை 61 ஆல் அதிகரித்து 1,361 ஆக உயர்வடைந்துள்ளது.

அவ்வாறே கனடிய மாகாண பிரதேச வாரியாக தொற்றுத் தொடர்பிலான புள்ளி விபரங்கள் இவ்வாறு காணப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

ஓன்டாரியோவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

ஓன்டாரியோவில் கோவிட்-19 கொறோனா நுன்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று மீண்டும் அதிகரிப்பு நிலை பதிவாகியது. இன்றைய தினம் புதிதாக 511 தொற்றுக்களும் 55 இழப்புக்களும் பதிவாகியது. இந்நிலையில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 17119 ஆகவும் இவர்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1249 ஆகவும் உயர்வடைந்தது. நேற்றைய தினம் 421 தொற்றுக்களும், 39 இழப்புக்களும் பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த அதிகரிப்பு நிலை காணப்படுகிறது. நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கோவிட்19 தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஒன்டாரியோவில் உள்ள 910 நீண்டகால முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் கடந்த 24 நேரத்தில் சுமார் 49 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த இல்லங்களில் இருந்து 167 புதிய தொற்றுக்களும் பதிவாகியுள்ளன. அத்துடன், கோவிட்19 தொற்றிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டவர்களில் இதுவரை 11,390 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒன்டாரியோவி...