இன்று நான்காவது நாளாக, ஒன்டாரியோ மாகாணத்தில் புதிதாக கோவிட்-19 நுண்மித் தொற்றுகைக்கு உள்ளானோரின் எண்ணிக்கையின் வேகம் தணிவடைந்து காணப்படுகின்றது.
இன்று புதன்கிழமை புதிதாக 412 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், 68 பேர் உயிரிழந்தாகவும் ஒன்டாரியோ மாகாண பிரதான மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ்( David Williams) தெரிவித்தார்.
அத்துடன், நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,722 ஆகவும், இவர்களில் 13,222 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1485 பேர் மரணித்துள்ளதாகவும் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
ஒன்டாரியோவில் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 57 சதவீதமானவர்கள் பெண்களாகும்.
இதேவேளை கொறோனா தொற்றால் ஏற்பட்ட அனர்த்த காலத்தில் ஒன்டாரியோவில்முன்னிலைப் பணியாளர்களாக செயற்பட்ட மருத்துவத் துறையினரில் சுமார் 3013 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக ஒன்டாரியோவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முறையே 387 ஆகவும் 370 என பதிவாகியிருந்தது.
ஒன்டாரியோவில் ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடுதலான தொற்றுக்களின் எண்ணிக்கையாக கடந்த ஏப்ரல் 25ம் நாள் பதிவான 640 தொற்றுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொறண்டோவில் கொறோனா நுண்மித் தொற்றால் இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரொறன்றோவில் கொறோனா பரவுகை உறுதி செய்யப்படுவோரின் இனம், பொருளாதார நிலைமை போன்ற தரவுகளைத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் ஐலீன் டி வில்லா(Eileen De Villa) கூறியுள்ளார்.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்ளின் மொத்த எண்ணிக்கை 63,496 ஆகவும், மரணமானவர்களின் எண்ணிக்கை 4297 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,829 ஆகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அந்தவகையில், கனடிய மாகாண, பிரதேச வாரியாக பதிவாகியுள்ள கொறோனா தொற்றுக்கள் குறித்த புள்ளி விபரங்கள் இவ்வாறு காணப்படுகின்றது.
இன்று புதன்கிழமை புதிதாக 412 பேருக்கு தொற்று ஏற்பட்டதாகவும், 68 பேர் உயிரிழந்தாகவும் ஒன்டாரியோ மாகாண பிரதான மருத்துவ அதிகாரி டேவிட் வில்லியம்ஸ்( David Williams) தெரிவித்தார்.
அத்துடன், நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,722 ஆகவும், இவர்களில் 13,222 பேர் குணமடைந்துள்ளதாகவும் 1485 பேர் மரணித்துள்ளதாகவும் புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
ஒன்டாரியோவில் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 57 சதவீதமானவர்கள் பெண்களாகும்.
இதேவேளை கொறோனா தொற்றால் ஏற்பட்ட அனர்த்த காலத்தில் ஒன்டாரியோவில்முன்னிலைப் பணியாளர்களாக செயற்பட்ட மருத்துவத் துறையினரில் சுமார் 3013 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக ஒன்டாரியோவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முறையே 387 ஆகவும் 370 என பதிவாகியிருந்தது.
ஒன்டாரியோவில் ஒரு நாளில் ஏற்பட்ட ஆகக் கூடுதலான தொற்றுக்களின் எண்ணிக்கையாக கடந்த ஏப்ரல் 25ம் நாள் பதிவான 640 தொற்றுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொறண்டோவில் கொறோனா நுண்மித் தொற்றால் இதுவரை 469 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரொறன்றோவில் கொறோனா பரவுகை உறுதி செய்யப்படுவோரின் இனம், பொருளாதார நிலைமை போன்ற தரவுகளைத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகர பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் ஐலீன் டி வில்லா(Eileen De Villa) கூறியுள்ளார்.
இதேவேளை, கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்ளின் மொத்த எண்ணிக்கை 63,496 ஆகவும், மரணமானவர்களின் எண்ணிக்கை 4297 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,829 ஆகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
அந்தவகையில், கனடிய மாகாண, பிரதேச வாரியாக பதிவாகியுள்ள கொறோனா தொற்றுக்கள் குறித்த புள்ளி விபரங்கள் இவ்வாறு காணப்படுகின்றது.



Comments
Post a Comment