Skip to main content

கோவிட்-19: குறைந்தது இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் - நிபுணர் குழு

கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றின் தாக்கமானது, குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என்று அமெரிக்காவின் மினசோடா பல்கலைக்கழகத்தின்( The University of Minnesota) தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சி மையம்( The Center for Infectious Disease Research ) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்றின் தாக்கம் இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் எனவும் விரைவில் கட்டுப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் இந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணர் குழுவின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு சனத்தொகையினர் இந்த நோய்க்கு எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்திக் கொள்ளும் வரையில் நோயின் தாக்கம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றின் அறிகுறிகள் தென்படாமலேயே ஒருவரிடமிருந்து இந்த நுண்மித் தொற்று பரவக்கூடிய தன்மையுடையது என்பதனாலும், சளிக்காய்ச்சல் போன்றல்லாதது என்பதனாலும் இதனைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பில்லியன் கணக்கான மக்களை முடக்கி இந்த கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்தது எதிர்வரும் 2022ம் ஆண்டு வரையில் நீடிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த உலகளாவிய ரீதியிலான பெருந்தொற்றுப் பரவுகை விரைவில் முடிவுக்குக் வந்துவிடாது என்பதனை உலக நாடுகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென நிபுணர்களின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நோய்த் தொற்றானது இடைக்கிடை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்டு அதற்கு மக்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வந்த போதிலும், இந்த ஆண்டில் சிறியளவிலான தடுப்பூசிகளே பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Key recommendations from the report:
  • States, territories, and tribal health authorities should plan for the worst-case scenario (which involves a large second peak of cases in the fall of 2020), including no vaccine availability or herd immunity.
  • Government agencies and healthcare delivery organizations should develop strategies to ensure adequate protection for healthcare workers when disease incidence surges.
  • Government officials should develop concrete plans, including triggers for re-instituting mitigation measures, for dealing with disease peaks when they occur.
  • Risk communication messaging from government officials should incorporate the concept that this pandemic will not be over soon and that people need to be prepared for possible periodic resurgences of disease over the next 2 years.
CIDRAP அறிக்கையின் முழுவடிவம் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளது.COVID-19: The CIDRAP Viewpoint

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.