ஒன்டாரியோ மாகாணத்தில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட 427 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்..
இது நேற்று அடையாளம் காணப்பட்ட 304 தொற்றுக்களில் இருந்து 1.9 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது.
இந்நிலையில் ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 384 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 15 இழப்புக்களுடன் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐந்தாக(20005) அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 70 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த முதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில், இதுவரை 17 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற்றம் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இந்த வாரங்களில் ஆரம்பிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
எனினும், தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் முன்னர் கொண்டுவரப்பட் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொருளாதார செயற்பாடுகளின் முதற்கட்டம் மீண்டும் ஆரம்பமாகிறது.
சமூக இடைவெளி பேணல், சுகாதாரம் பேணல் போன்றவற்றைக் கடைப்பிடித்து மக்கள் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கனடாவில் கொறோனா தொற்றால் இதுவரை 78 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 5 ஆயிரத்து 994 பேர் மரணித்துள்ளதாகவும், 39 ஆயிரத்து 521 பேர் குணமடைந்தும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
இது நேற்று அடையாளம் காணப்பட்ட 304 தொற்றுக்களில் இருந்து 1.9 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது.
இந்நிலையில் ஒன்றாரியோவில் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 384 ஆக பதிவாகியுள்ளது.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 15 இழப்புக்களுடன் ஒன்றாரியோவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து ஐந்தாக(20005) அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 70 சதவீதமானவர்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த முதாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் தொற்றுக்குள்ளாகியுள்ளோரில், இதுவரை 17 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடணம் மே 29 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற்றம் போன்ற வர்த்தக நடவடிக்கைகள் இந்த வாரங்களில் ஆரம்பிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
எனினும், தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் முன்னர் கொண்டுவரப்பட் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொருளாதார செயற்பாடுகளின் முதற்கட்டம் மீண்டும் ஆரம்பமாகிறது.
சமூக இடைவெளி பேணல், சுகாதாரம் பேணல் போன்றவற்றைக் கடைப்பிடித்து மக்கள் செயற்படவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கனடாவில் கொறோனா தொற்றால் இதுவரை 78 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் 5 ஆயிரத்து 994 பேர் மரணித்துள்ளதாகவும், 39 ஆயிரத்து 521 பேர் குணமடைந்தும் உள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.


Comments
Post a Comment