ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளாதாக புள்ளி விபரத் தகவல்கள் காட்டுகின்றன.
அனைத்துலக ரீதியாக, கொறோனா நுண்மித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை முப்பத்து இரண்டு இலட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரத்தைக் (3,269,667) கடந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. இவர்களில் இரண்டு இலட்சத்து முப்பத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் (233,693) மரணித்துள்ளதுடன், பத்து இலட்சத்து இருபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர்(1,020,046) குணமடைந்துள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன.
கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்காவில் பத்து இலட்சத்து எழுபதினாயிரத்துக்கும்(1,070,032) அதிகமானோருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அறுபத்து மூவாயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்த வரிசையில், குவிரன் செய்திக் குழுமத்தின் தகவல் சேகரிப்பின் அடிப்படையில் நாடுகளின் தரவுகள் பட்டியலில் படுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறே குவிரன் செய்திக் குழுமத்தின் தகவல் சேகரிப்பின் அடிப்படையில் குணமடைந்தோரின் விபரங்கள் பட்டியலில் படுத்தப்பட்டுள்ளன.
இந்த தகவலின் அடிப்படையில் நோக்கப்படும் இடத்து, குறிப்பாக, பிரித்தானியாவில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும், சிகிச்சை பலனின்றி மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் அதேவேளை, தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவாகவே புள்ளிவிபரத் தகவல்கள் காட்டுகின்றன.
இதேவேளை, ஆபிரிக்காக் கண்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொறோனா நுண்மித் தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைளின் மத்தியிலும் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.




Comments
Post a Comment