பிரிவினைவாதத்தை தூண்டி ஆட்சி புரியும் தந்திரோபாயத்தை கோட்டாபய ராஜபக்ச கைவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாகவும் வன்முறைகளை இல்லாதொழிப்பதாகவும் கூறி ஆட்சி பீடம் ஏறினார். எனினும் கோவிட்-19 கொறோனா நுண்மி பெரும்பரவுகை அனர்த்தத்தை பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் முனைப்புக்களில் தீவிரம் காண்பித்து வருகின்றார். குறிப்பாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவிணையை ஏற்படுத்தி வன்முறைகளை அரங்கேற்றும் நடவடிக்கைகளிலேயே சிரத்தை காட்டி வருகின்றார்.
பிரிவினைவாதத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தும் யுக்தியை கைவிடுமாறு மேற்குலக நாடுகளின் ஜனநாயக அரசாங்கங்கள் கோட்டபாயவை வலியுறுத்த வேண்டும் என்று International Policy Digest க்கு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் எழுதிய பத்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரச அதிபர் தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை தீவிரவாதிகளிடமிருந்து சிங்கள பெரும்பான்மை சமூகத்தை பாதுகாக்கும் பாதுகாவலன் என்ற அடிப்படையில் பிரச்சார நகர்வுகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.
கோட்டாபாய ராஜபக்சவின் பிரிவினைவாத பிரச்சாரம் அவருக்கு வெற்றி வாகை சூட்டு வித்த போதிலும், சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் அனைத்திலும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
கொறோனா நுண்மி பரவுகையை பயன்படுத்தி பாரியளவிலான கைதுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மேற்கொள்வதாகவும், இது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளர் மிச்ஷேல் பச்லெட் (Michelle Bachelet) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலான செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது, குறிப்பாக மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் தடுக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் ஊடகவியலாளர்கள் அநேக சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டும் வேறும் வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொறோனா நுண்மித் தொற்று தொடர்பில் தகவல்களை வெளியிட்ட சில மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கூட பல்வேறு வழிகளில் நெருக்குதல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று ஊடகவியலளார் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர், மனிதநேயச் செயற்பாட்டாளர்களை அடக்க பயன்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மார்ச் 2008ம் ஆண்டு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் மத்தியில் மே 2010ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காவில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதாகவும் வன்முறைகளை இல்லாதொழிப்பதாகவும் கூறி ஆட்சி பீடம் ஏறினார். எனினும் கோவிட்-19 கொறோனா நுண்மி பெரும்பரவுகை அனர்த்தத்தை பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் முனைப்புக்களில் தீவிரம் காண்பித்து வருகின்றார். குறிப்பாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவிணையை ஏற்படுத்தி வன்முறைகளை அரங்கேற்றும் நடவடிக்கைகளிலேயே சிரத்தை காட்டி வருகின்றார்.
பிரிவினைவாதத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தும் யுக்தியை கைவிடுமாறு மேற்குலக நாடுகளின் ஜனநாயக அரசாங்கங்கள் கோட்டபாயவை வலியுறுத்த வேண்டும் என்று International Policy Digest க்கு ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகம் எழுதிய பத்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரச அதிபர் தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை தீவிரவாதிகளிடமிருந்து சிங்கள பெரும்பான்மை சமூகத்தை பாதுகாக்கும் பாதுகாவலன் என்ற அடிப்படையில் பிரச்சார நகர்வுகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.
கோட்டாபாய ராஜபக்சவின் பிரிவினைவாத பிரச்சாரம் அவருக்கு வெற்றி வாகை சூட்டு வித்த போதிலும், சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் அனைத்திலும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
கொறோனா நுண்மி பரவுகையை பயன்படுத்தி பாரியளவிலான கைதுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா உள்ளிட்ட சில நாடுகள் மேற்கொள்வதாகவும், இது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளர் மிச்ஷேல் பச்லெட் (Michelle Bachelet) அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலான செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது, குறிப்பாக மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் தடுக்கப்படுகின்றனர்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் ஊடகவியலாளர்கள் அநேக சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டும் வேறும் வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
![]() |
| Journalist J.S.Tissainayagam |
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர், மனிதநேயச் செயற்பாட்டாளர்களை அடக்க பயன்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மார்ச் 2008ம் ஆண்டு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் மத்தியில் மே 2010ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment