Skip to main content

கோவிட்-19: இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஸ்ரீலங்கா

கொறோனா பெருந்தொற்றை பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது 


கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பெரும்பரவுகையை பயன்படுத்தி கோட்டபாய ராஜபக்ச அரசு, இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொறோனா நுண்மித் தொற்று அனர்த்தம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கோரிக்கைகளை முன்வைக்கும் அனைத்து தரப்பினர் குறித்தும் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணகைளை நடத்தி வருவதாக The Alliance of Independent Professionals (AIP) என்ற சுயாதீன தொழில்வான்மையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நுண்மித் தொற்று அனர்த்தத்திற்கு மத்தியில், ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவாத அடிப்படையில் செயற்படுவதுடன், மாற்றுக் கருத்துடையவர்களை முடக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொறோனா நுண்மித் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவிலேயே மிகவும் குறைந்தளவான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும் தங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த தொழில்வான்மையாளர்கள் தங்களது பெயர்களை வெளியிடாது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

நுண்மித் தொற்றுக்கு இலக்கானவர்கள் பற்றிய தகவல்கள் இன ரீதியான அடிப்படையில் திரட்டப்பட்டு இன ரீதியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நோய்த் தொற்று பரவுகை கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கம் கடுமையான இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மூலம்-@JDSLanka




Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.