கொறோனா பெருந்தொற்றை பயன்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது
கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பெரும்பரவுகையை பயன்படுத்தி கோட்டபாய ராஜபக்ச அரசு, இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்று அனர்த்தம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கோரிக்கைகளை முன்வைக்கும் அனைத்து தரப்பினர் குறித்தும் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணகைளை நடத்தி வருவதாக The Alliance of Independent Professionals (AIP) என்ற சுயாதீன தொழில்வான்மையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நுண்மித் தொற்று அனர்த்தத்திற்கு மத்தியில், ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவாத அடிப்படையில் செயற்படுவதுடன், மாற்றுக் கருத்துடையவர்களை முடக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவிலேயே மிகவும் குறைந்தளவான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும் தங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த தொழில்வான்மையாளர்கள் தங்களது பெயர்களை வெளியிடாது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நுண்மித் தொற்றுக்கு இலக்கானவர்கள் பற்றிய தகவல்கள் இன ரீதியான அடிப்படையில் திரட்டப்பட்டு இன ரீதியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நோய்த் தொற்று பரவுகை கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கம் கடுமையான இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்-@JDSLanka
கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பெரும்பரவுகையை பயன்படுத்தி கோட்டபாய ராஜபக்ச அரசு, இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்று அனர்த்தம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கோரிக்கைகளை முன்வைக்கும் அனைத்து தரப்பினர் குறித்தும் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணகைளை நடத்தி வருவதாக The Alliance of Independent Professionals (AIP) என்ற சுயாதீன தொழில்வான்மையாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நுண்மித் தொற்று அனர்த்தத்திற்கு மத்தியில், ஸ்ரீலங்கா அரசாங்கம் இனவாத அடிப்படையில் செயற்படுவதுடன், மாற்றுக் கருத்துடையவர்களை முடக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொறோனா நுண்மித் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவிலேயே மிகவும் குறைந்தளவான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும் தங்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த தொழில்வான்மையாளர்கள் தங்களது பெயர்களை வெளியிடாது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நுண்மித் தொற்றுக்கு இலக்கானவர்கள் பற்றிய தகவல்கள் இன ரீதியான அடிப்படையில் திரட்டப்பட்டு இன ரீதியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நோய்த் தொற்று பரவுகை கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கம் கடுமையான இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்-@JDSLanka



Comments
Post a Comment