ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 என்று மாகாண அரசு அறிவித்தது.
அத்துடன் 32 பேர் உயிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேல் தொற்றுக்கள் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்னூற்றுக்கும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒன்ராறியோவின் இதுவரை கோவிட் 19 தொற்றால் 26 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,372 பேர் குணமடைந்துள்ளதுடன், 2223 நோயாளிகள் இத்தொற்றால் இறந்துள்ளனர்.
இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 3931 பேரில். 78 சதவீதமான 3054 பேர் ரொறண்டோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.
இவ்வாறே கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளான ஐந்தாயிரம் பேரில் 52 சதவீதமானவர்களும், மே மாதத்தில் 76 சதவீதமான 6600 பேரும் ரொறண்டோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.
ரொறண்டோ நகரில் மட்டும் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,525 ஆகவும், இவர்களில் 7814 பேர் குணமடைந்துள்ளதுடன், 780 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் ரொறண்டோ பெரும்பாகத்தில் கொறோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மாகாண மற்றும் நகரசபை நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதேவேளை, ஒன்ராறியோ அரசு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவித்த அவசரகாலச் சட்டத்தை யூன் 9ம் நாள் வரை நீடித்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
யூன் 9 வரை, ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்பதோடு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் மாகாணத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிருந்து உணவருந்தும் சேவையை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓன்றாரியோ மாகாணத்தை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்கத் தொடங்கும் போது, அனைத்து தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களின் நலத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காகவே இந்த அவசர உத்தரவுகளை நாங்கள் நீடித்திருக்கின்றோம் என்றும் ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் இன்று தெரிவித்திருக்கின்றார்.
கனடாவில் இன்று மாலை ஆறு மணிவரையான பதிவுகளின் படி 87,510 பேருக்கு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 46,155 பேர் குணமடைந்தும், 6857 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
அத்துடன் 32 பேர் உயிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேல் தொற்றுக்கள் காணப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை முன்னூற்றுக்கும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒன்ராறியோவின் இதுவரை கோவிட் 19 தொற்றால் 26 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20,372 பேர் குணமடைந்துள்ளதுடன், 2223 நோயாளிகள் இத்தொற்றால் இறந்துள்ளனர்.
இதேவேளை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 3931 பேரில். 78 சதவீதமான 3054 பேர் ரொறண்டோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது.
இவ்வாறே கடந்த ஏப்ரலில் தொற்றுக்குள்ளான ஐந்தாயிரம் பேரில் 52 சதவீதமானவர்களும், மே மாதத்தில் 76 சதவீதமான 6600 பேரும் ரொறண்டோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்களாக காணப்பட்டனர்.
ரொறண்டோ நகரில் மட்டும் கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,525 ஆகவும், இவர்களில் 7814 பேர் குணமடைந்துள்ளதுடன், 780 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் ரொறண்டோ பெரும்பாகத்தில் கொறோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மாகாண மற்றும் நகரசபை நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.
இதேவேளை, ஒன்ராறியோ அரசு கொறோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவித்த அவசரகாலச் சட்டத்தை யூன் 9ம் நாள் வரை நீடித்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
யூன் 9 வரை, ஐந்து பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடக் கூடாது என்பதோடு, விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் மாகாணத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிருந்து உணவருந்தும் சேவையை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓன்றாரியோ மாகாணத்தை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறக்கத் தொடங்கும் போது, அனைத்து தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களின் நலத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்காகவே இந்த அவசர உத்தரவுகளை நாங்கள் நீடித்திருக்கின்றோம் என்றும் ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் இன்று தெரிவித்திருக்கின்றார்.
கனடாவில் இன்று மாலை ஆறு மணிவரையான பதிவுகளின் படி 87,510 பேருக்கு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதுடன், இவர்களில் 46,155 பேர் குணமடைந்தும், 6857 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.



Comments
Post a Comment