ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மிப் பரவுகை மீண்டும் ஒரு அதிகரிப்பை இன்று பதிவு செய்தது. நாளார்ந்த பரவுகை வீதமானது 1.8 சதவீதத்தால் அதிகரித்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 441 பேர் பரவுகையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே 08ம் நாளுக்குப் பின்னர் பதிவான கூடுதலான எண்ணிக்கையாக பொதுச் சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் பதிவான 28 இழப்புக்களுடன் இதுவரை 2100 மரணங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 77 சதவீதமானவர்கள் நீண்டகால பராமரிப்பு மருத்துவ இல்லங்களில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோவி;ல் தொற்றுக்குள்ளாகியுள்ள 24,628 பேரில் 76.2 சதவீதமான 18,767 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ரொறண்டோ மிருகக் காட்சிசாலை நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் பார்வைக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொறோனா பரவுகையைக் கட்டுப்படுத்தும் வண்ணம் பொதுச் சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு அமைய 45 நிமிட நேரம் வாகனங்களில் இருந்த வண்ணம் 3.4 கிலோமீற்றர் சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் இதற்கான நுழைவுச் சீட்டுக்கள் விநிநோகிக்கப்படுகின்றன. கட்டண விபரம் உள்ளிட்ட மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள இந்த இணைப்புக்குள் செல்க.Toronto Zoo




Comments
Post a Comment