கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று ஒன்றாரியோவில் மீண்டும் தணிவடைந்தது. கடந்த ஐந்து நாட்களாக நானூற்றுக்கு மேற்பட்ட தொற்றுக்களை பதிவு செய்து வந்த நிலையில், இன்று நாளார்ந்த தொற்றுப் பதிவு 1.1 சதவீமாக 287 புதிய தொற்றுக்கள் பதிவாகின.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 21 இழப்புக்களுடன் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 2194 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை தினமும் பதினாறாயிரம் பரிசோதனைகள் என்ற இலக்கை நேற்றைய தினமும் எட்டாத நிலையில், 9ஆயிரத்து 875 பரிசோதனைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிந்திய 287 தொற்றுக்களுடன் ஒன்றாரியோவில் இதுவரை மொத்தம் 26,191 தொற்றுக்கள் இனம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 76.2 சதவீதமான 19,958 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment