Western மருத்துவமனையில் 5ம் தடவையாகக் கோவிட் 19 தொற்று.
ரொராண்ரோ Western மருத்துவமனையில் மேலும் 5 ஊழியர்கள் கோவிட் 19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இம்முறை அவசர சிகிச்சைப் பிரிவில் இத்தொற்று பரவியிருக்கின்றது. இந்த மருத்துவமனையில் தொற்று கண்டறியப்படுவது இது 5வது தடவையாகும்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 20 முதல் மே 3 வரை அவசரப் பிரிவில் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையின் அவசரப் பிரிவு மூடப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் அவசரப் பிரிவை மூடத்தேவையில்லை என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் 4 தடவை தொற்றுகள் பணியாளர்களிடையே உறுதிப்படுத்தப்பட்;டிருந்தன. இரு தடவை கோவிட் 19 நோயாளர் பகுதியிலும் இரு தடவை பிற பகுதிகளிலும் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.
இத்தடவை அவசர சிகிச்சைப் பிரிவில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
Comments
Post a Comment