ஒன்றாரியோவில் கோவிட் 19 தொற்று தொடர் வீழ்ச்சி
ஒன்ராறியோவில் இன்று 203 புதிய தொற்றுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 28ம் திகதிக்குப் பின்னரான மிகக் குறைந்த நாளாந்த எண்ணிக்கையாகும். அத்துடன் 12 புதிய இறப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றைய நாள் மட்டும் 500 கோவிட் 19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது இன்றைய நாளாந்த எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும்.
இந்த வாரத்தில் நாளாந்த எண்ணிக்கை 300 க்குக் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஒன்றாரியோ மாகாணத்தில் இதுவரை 31,544 பேர் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,885 நோயாளிகள் முற்றிலும் குணமடைந்துள்ளனர். இதுவரை 2,487 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.
இந்த இறப்புகளில் 11 பேர் 20-39 வயதுடையவர்களாகவும் 94 பேர் 40 முதல் 59 வயதுடையவர்களாகவும், 657 பேர் 60 முதல் 79 வயதுடையவர்களாகவும் 1,725 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இன்று வெளியாள எண்ணிக்கையில் ரொரண்ரோ, பீல் பிராந்தியங்களில் மட்டும் 131 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று வெளியான எண்ணிக்கையில் 34 சதவீதமானோர் 40-59 வயதுதுக்குட்பட்டோராவர்.
இத்தொடர் வீழ்ச்சி மாகாணத்தின் பொருளாதார செயற்பாடுகளை விரைவுபடுத்த உதவும் எனக் கூறப்படுகின்றது.

Comments
Post a Comment