
ஒன்றாரியோவில் அதிகரித்துச் செல்லும் கோவிட் 19 பரவல்
ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை 446 புதிய தொற்றுகள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு இளையவர்கள்உட்பட 19 பேர் நேற்று இறந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்ராறியோவில் இப்போது 3,932 நோயாளிகள் கண்காணிப்பிலும் மருத்துவமனைகளிலும் உள்ளனர். முற்றிலும் குணமடைந்தோர் 22,484 பேர். ஒன்ராறியோவில் இத்தொற்றால் இதுவரை 28,709 பேர் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.
திங்கட்கிழமை ஏற்பட்ட அதிகரிப்பில் பெரும்பான்மை தெற்கு ஒன்ராறியோவில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஏற்பட்டிருந்தன. சிம்கோ பகுதியில் உள்ள பண்ணைகளில் 120 பேரும் செயின்ட் கதரீன் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் குறைந்தது 20 பேரும் பாதிக்ப்பட்டுள்ளனர். இதுவே இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.
நேற்று இறந்தவர்களில்; இருவர் 20 – 39 வயதிற்குட்டோர் ஆவர். இதுவரை ஒன்ராறியோவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்குட்பட்டவர்களில் 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

Comments
Post a Comment