ஒன்ராறியோவில் கோவிட் 19 தொடர் வீழ்ச்சி
ஒன்ராறியோவில் இன்று 230 புதிய தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் 19 தொற்றால் ஏற்பட்ட 14 புதிய இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாத இறுதிக்குப் பின் குறைந்தளவான தொற்றுகள் ஏற்பட்டுவருவதை காணக்கூடியதாகவுள்ளது என மருத்தவத்துறை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவில் இப்போது மொத்தமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,090 ஆகும். இதில் 24,829 முற்றிலும் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2,464 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 337 முற்றிலும் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தொற்றுப் பரவல் குறைந்துவருதையிட்டு மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மனநிறைவு அடைவதற்காக தூரம் அதிகமுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
104 இறப்புகளைத் தவிர ஏனைய இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டையாக இருந்தன. அதில் 1,715 இறப்புகள் 80 வயதுக்கு மேற்பட்டவையாக இருந்தன.
இப்போது தொற்றுக் காரணமாக 600 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,509 பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன.

Comments
Post a Comment