ஒன்ராறியோவில் தொற்று எண்ணிக்கை 338 ஆக வீழ்ச்சி அடைந்தது.
ஒன்ராறியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 338 புதிய கோவிட்19 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களும் தொற்றுகள் கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று நாளாந்த எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. அதேவேளை நேற்று மட்டும் 19 பேர் இத்தொற்றுக் காரணமாக இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவில் இது மொத்தம் 29,047 நோயாளிகள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2312 பேர் இறந்துள்ளனர். 33,811 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர்.
ஓய்வூதிய நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒன்றாரியோவில் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான இறப்புகள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களிலேயே நிகழ்ந்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 791 ஆக குறைந்ததுள்ளது. அவர்களில், 127 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொறோனா தொற்றுக் குறித்த 17,537 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் கொறோனா தொற்றுக் குறித்த 17,537 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Comments
Post a Comment