ஒன்ராறியாவில் புதிய தொற்று எண்ணிக்கை 344 - இறப்பு 15

ஒன்ராறியோவில் 344 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ள அதேவேளையில் 15 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு நாட்களின் சராசரி நாளாந்த அதிகரிப்பு 360 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் இப்போது 3,792 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 29,747 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23,583 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை இறந்தவர்களில் 103 பேரைத் தவிர ஏனையோர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆவர். அவர்களில் 1,646 பேர் 80 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் நீண்டகால பராமரிப்பு அல்லது ஓய்வூதிய இல்லங்களில் வசித்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ரொரண்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது 749 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 118 ஆகக் குறைந்துள்ளது.
Comments
Post a Comment