Skip to main content

கோவிட்-19: ஒரு இலட்சத்தைக் கடந்த கனடா!


கனடாவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து நூற்று நாற்பத்தாறாக(100,146) ஆக பதிவாகியது. இவர்களில் 62,442 பேர் குணமடைந்துள்ளதுடன், 8348 பேர் மரணித்தும் உள்ளனர்.

கனடாவில் கோவிட்-19 ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட குபெக்கில் இன்று பதிவான 120 தொற்றுக்களுடன் மொத்தமாக 54383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிந்திய 42 இழப்புக்களுடன் 5340 பேர் மரணித்துள்ளனர்.

ஒன்ராறியோவில் தொடர்ந்து கோவிட் 19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுப் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் நாளாந்த தொற்று எண்ணிக்கையளவு குறைந்து வருகின்றது.

நேற்றைய தினம் ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 25,278 பரிசோதனைகளில், 173 தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் கோவிட் 19 காரணமான 3 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
கடந்த ஐந்து நாள் சராசரித் தொற்று எண்ணிக்கை 185 ஆக உள்ளது. அதேவேளை நாளாந்தம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. நாளாந்தம் சராசரியாக 220 பேர் குணமடைகின்றனர்.
தற்சமயம் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 1455 ஆகும். இவ்வெண்ணிக்கை நாளாந்தம் குறைந்து வருவதாக மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 32,917 ஆக உள்ளது. இதில் 28,004 குணமடைந்துள்ளனர். 2,603 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 78 சதவீதமான இறப்புக்கள் நீண்டகால மருத்துவ பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.