ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்று தொடர்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 27,225 பரிசோதனைகளில் 178 புதிய தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 இறப்புகளும் பதிவாகின.
தொடர்ச்சியாக ஆறாவது நாளாக தொற்று எண்ணிக்கை 200க்கும் கீழ் இருந்து வருகின்றது. இன்றைய எண்ணிக்கை நேற்றைய நாளை விட சற்று அதிகமாகும். கடந்த ஐந்து நாள் சராசரி எண்ணிக்கை 181 ஆகும்.
மாகாண அளவில் தற்போது 2,281 நோயாளிகள் கோவிட் 19 தொற்று தொடர்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒன்றாரியோவில் இதுவரை 33,095 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 85.4 சதவீதமான 28,250 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் தொற்றுக் காரணமாக மொத்தம் 2605 பேர் மரணித்தும் உள்ளனர்.
இன்று ரொறண்டோ மற்றும் பீல் பிராந்தியம் தவிர்ந்த ரொறண்டோ பெரும்பாகத்தின் யோர்க் உள்ளிட்ட ஏனைய எழு பகுதிகளில் இரண்டாம் கட்டமான மாகாண அரசின் தளர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment