Skip to main content

ஒன்றாரியோவில் புதிய தொற்று எண்ணிக்கை 182

ஒன்றாரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றின் தாக்கம் வெகுவாக குறைவடைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை 182 ஆக காணப்படுகின்றது.
இவ்வாறு நாளார்ந்த தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து விழ்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்ட இந்தத் தொற்று எண்ணிக்கை, மார்ச் 28ம் நாளுக்கு பின்னரான ஆகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
கடந்;த வாரத்தின் 5 நாள் சராசரியாக நாளாந்த தொற்றுக்களின் எண்ணிக்கை 222 ஆக காணப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை ஒன்றாரியோவில் 28,335 தனிநபர் சோதனைகளை நடத்திய பின்னரே இந்த புதிய எண்ணிக்கை பற்றிய முடிவுகள் வெளியாயின.
தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்டுவரும் தொடர் வீழ்ச்சி சாதகமான கூழலை நோக்கி நாம் செல்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றது என்று நலத்துறை அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார்.
நேற்று இத்தொற்றால் 11 பேர் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கான நாளாந்த சராசரி இறப்பு 14 ஆகும்.
மருத்துவமனைகளல் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு மாத காலமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேருடன் தற்போது 527 பேர் சிகிச்கை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 114 பேர் 84 பேர் உயிர்காப்பு சாதனத்தின் துணையுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒன்றாரியோவில் இதுவரை 31,726 பேருக்கு தொற்றுக்கள் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 82.5 சதவீதமான 26,187 பேர் குணமடைந்தனர். அத்துடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2544 ஆக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.