ஒன்றாரியோ ஆய்வுகூடங்களில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 தொடர்பான 23,207 பரிசோதனைகளில் 163 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன.
இது இரண்டவது குறைவான தொற்றுக்களின் எண்ணிக்கை குறித்த பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் 10 இழப்புக்களும் பிந்திய அறிக்கையில் தவறவிடப்பட்ட இரண்டு என்று 12 மரணங்கள் பதிவாகின.
இத்துடன் ஒன்றாரியோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,016 ஆக அதிகரித்தது. இவர்களில் 86.2 சதவீதமான 29,336 பேர் குணமடைந்துள்ளதுடன், 2631 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் ரொறன்ரோ மற்றும் பீல்ப் பிராந்தியங்களில் மாகாண அரசின் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய அறிக்கையில் பீல்ப் பிராந்தியத்தில் 33 தொற்றுக்களும், ரொறன்ரோவில் 71 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.
எனினும் இதுவரை இரண்டாம் கட்ட தளர்வு அமுல்ப் படுத்தப்படாமல் இருக்கும் வின்ட்சரில், இன்று ஐந்து தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது இரண்டவது குறைவான தொற்றுக்களின் எண்ணிக்கை குறித்த பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் 10 இழப்புக்களும் பிந்திய அறிக்கையில் தவறவிடப்பட்ட இரண்டு என்று 12 மரணங்கள் பதிவாகின.
இத்துடன் ஒன்றாரியோவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,016 ஆக அதிகரித்தது. இவர்களில் 86.2 சதவீதமான 29,336 பேர் குணமடைந்துள்ளதுடன், 2631 பேர் மரணித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் ரொறன்ரோ மற்றும் பீல்ப் பிராந்தியங்களில் மாகாண அரசின் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டுத் தளர்வு அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய அறிக்கையில் பீல்ப் பிராந்தியத்தில் 33 தொற்றுக்களும், ரொறன்ரோவில் 71 தொற்றுக்களும் பதிவாகியுள்ளன.
எனினும் இதுவரை இரண்டாம் கட்ட தளர்வு அமுல்ப் படுத்தப்படாமல் இருக்கும் வின்ட்சரில், இன்று ஐந்து தொற்றுக்கள் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment