இலங்கை வானொலித்துறையில் மூத்த ஒலிப்பரப்பாளரும், கலைஞருமான திரு.சி.நடராஜசிவம் இன்று ஜூன் 24ம் நாள் கொழும்பில் காலமானார்.
இவரது ஊடகப் பயணத்தில் இலங்கை வானொலியின் மூத்த ஒலிப்பாளராக இருந்த அவர், பின்னர் கொழும்பில் ஆரம்பமாகிய ஆசிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையான சூரியன் பண்பலை வானொலியின் முதலாவது நிகழ்ச்சி முகாமையாளராகவும், ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தார்.
ஊடகத்துறை மட்டுமன்றி திரைப்படத்துறையிலும், நாடகத்துறையிலும் சிறந்த கலைஞராக திகழ்ந்த நடராஜசிவம், தமிழ் நாடகத்துறை மட்டுமன்றி அவர் சிங்கள நாடகத்துறையிலும் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment