Skip to main content

அவசரகால நிலையை மீண்டும் நீடித்த ஒன்றாரியோ!


ஒன்றாரியோ அரசு அவசரகால நடவடிக்கைகளை ஜூன் 19ம் நாள் வரை நீடித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் ஜூன் 9ம் நாளோடு காலவதியாகும் நிலையில், இது ஜூன் 30 வரை நீடிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் அரசு 10 நாட்களுக்கு மட்டும் அவசரகாலச் செயற்பாடுகளை நீடித்துள்ளது.

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றை கட்டுப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட அவசரகால உத்தரவுகளுக்கு அமைய உள்ளக உணவகங்கள், பேரங்காடிகள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் முடி திருத்தகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதுடன் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூடுவதுவும் தடைசெய்யப்பட்டிருந்தது.


இந்த அவசரகால உத்தரவுகள் தொடர்ந்து பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்வை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் மீள கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.

எதுவாயினும் தொற்றுநோய்ப் பரவல் தொடர்பான தகவல்களை அடிப்படையாக் கொண்டே முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதற்படிநிலை அமுல்ப்படுத்தப்பட்டு பலவாரங்கள் கடந்துள்ள நிலையில், இரண்டாம் நிலை எதிர்வரும் வாரம் அமுல்ப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பிரகாரம் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் எதிர்வரும் வாரம் முதல் மீளத் திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.