ஒன்றாரியோவில் இன்று 455 கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட 387 தொற்றுக்களும் ஆய்வுகூடத்தில் பிந்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட 68 பதிவுகளுடன் சேர்ந்து 455 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன.
கடந்த இரண்டு வாரத்தில் பதிவாகிய அதிகூடிய தொற்றாக இது காணப்படுகின்றது.
இதேவேளை, கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,202 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 23,947 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் பதிவான 35 இழப்புக்களுடன் கொறோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2434 ஆக உயர்வடைந்தது.
நேற்றைய தினம் 23,105 பரிசோதனைகள் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே ஒரு நாளில் ஒன்றாரியோவில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனைகளாக காணப்படுகிறது.
கடந்த இரண்டு வாரத்தில் பதிவாகிய அதிகூடிய தொற்றாக இது காணப்படுகின்றது.
இதேவேளை, கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,202 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்றில் 23,947 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் பதிவான 35 இழப்புக்களுடன் கொறோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2434 ஆக உயர்வடைந்தது.
நேற்றைய தினம் 23,105 பரிசோதனைகள் ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே ஒரு நாளில் ஒன்றாரியோவில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பரிசோதனைகளாக காணப்படுகிறது.

Comments
Post a Comment