![]() |
| Pic Credit: CP24 |
ஒன்றாரியோ சுகாதாரத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட், கோவிட்-19 பரிசோதனை முடிவு அறிவதற்கு முன்னர் மதுபானம் கொள்வனவு செய்ய சென்றமை குறித்து விமர்சனம் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், சுகாதார அமைச்சர் எலியட் ஆகியோர் நேற்று புதன்கிழமை கொறோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
பிற்பகல் 3 மணிக்கு அவரது பரிசோதனைக்கான நேர ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு முன்னதாக Dupont Street & Spadina Avenue க்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில்(LCBO) கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆதாரம் வெளியாகியுள்ளது.
முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஸ்ரிஃபன் லெச்சே மேற்கொண்டிருந்த கோவிட்-19 பரிசோதனை முடிவு, நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் வெளியாகியிருந்தது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் தொற்றுக் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்ட எலியட், மருத்துவ அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக நடந்து கொண்டதாக இன்று செய்தியாளரி;ன் கேள்விக்கு அளித்த பதிலில் எலியட் நியாயப்படுத்தி இருந்தார். மேலும் தான் தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவை இருந்ததில்லை என்றும் கூறினார்.
அமைச்சர் லெச்சேயுடனான நெருக்கமான ஒருவருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, முன்னதாக லெச்சே பரிசோதனை மேற்கொண்டார்.
நேற்றைய தினம் முதல்வர் ஃபோர்ட்டும், அமைச்சர் எலியட்டும் பரிசோதனை மேற்கொண்டனர். அனைவருக்கும் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஃபோர்ட்டும், எலியட்டும் குயின்பார்க்கில் ஊடகத்துறைச் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment