குபெக்கில் பொதுப்போக்குவரத்தில் முகக் கவசம் அணிவது ஜூலை 13ம் நாள் முதல் கட்டாயமாக்கப்படுவதாக அம்மாகாண முதல்வர் François Legault இன்று அறிவித்தார்.
கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம், இன்னும் இரண்டு வாரங்களில் அகவை 12க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்படும் நிலையில், அனைவரும் பழக்கத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் என்று Legault நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும் பொதுப் போக்குவரத்தின் போது முகக் கவசம் அணியாதவர்கள் ஜூலை 27ம் நாள் முதல் பயணத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.
குபெக்கில் கடந்த 24 மணிநேரத்தில் 68 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டது. இத்துடன் குபெக்கில் தொற்றால் பாதி;க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,458 ஆக அதிகரித்தது.
இவர்களில் பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் பிந்திய 18 இழப்புக்களுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5503 ஆக உயர்வடைந்தது.



Comments
Post a Comment