Skip to main content

ஸ்லோவாக்கியா பள்ளியில் கத்திக்குத்து – உப அதிபர் மரணம்!


ஸ்லோவாக்கியாவின்(Slovakia) வடக்கே பள்ளிக்கூடம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் உப-அதிபர் உயிரிழந்தார். ஸ்லோவாக்கியாவின் Vrutky நகரில் அமைந்துள்ள குறித்த பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவனான 22 வயதான நபரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாவும், அவர் காவற்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பள்ளிக்கூடத்தின் கண்ணாடியாலான கதவை உடைத்துக் கொண்டு உட்சென்ற நபரை, துணை அதிபர் இடைமறித்த வேளை அவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வகுப்பறை ஒன்றினுள் சென்ற அவரை இடைமறித்த பெண் ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களில் உப-அதிபர் உயிரிழந்தார். பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கூடப் பணியாளர் ஒருவர் அத்துடன் இரண்டு மாணவர்கள் ஆகியோர் காயமடைந்தனர்.
அங்கு சென்ற காவற்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்ட வேளையில், காவற்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வேளையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் போது இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்களும் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.