சுவிற்சர்லாந்திலுள்ள பயணிகள் தொடரூந்;தில் மூன்று கிலோ தங்க பிஸ்கட்டுக்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்;டது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் St. Gallen இல் இருந்து Lucerne க்கு சென்ற பயணிகள் பேரூந்தில் இவ்வாறு தவறவிடப்பட்டதாக சந்தேகிகப்படும் இப்பொதி, கடமையில் இருந்த அப்பேரூந்துப் பணியாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம்(260,000) டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் உரிமையாளர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், ஐந்து வருட காலப்பகுதியுள்ள இந்த விலையுயர்ந்த பொதியை தவறவிட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment