ஒன்ராரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளில் முறையே 149, 153 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன.
நேற்று கனடா தினம் நாளார்ந்த தொற்றுக்கள் குறித்த அறிக்கை வெளியாகியிருக்காத நிலையி;ல், இன்று அந்த இரண்டு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் 24,322 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒன்ராரியோவி;ல் இதுவரை 35,370 தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், இவற்றில் 86.9 சதவீதமான 30,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2680 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 29 பிரிவுகளில் ஐந்திற்கும் குறைவான அல்லது எவ்வித தொற்றுக்களும் அடையாளம் காணப்படாத பிரிவுகளாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிறின்ரீன் எலியட் தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட முடக்கநிலையில் இருந்து படிப்படியாக தளர்வை மேற்கொண்டு நாளார்ந்த இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் மாகாண அரசின் நடவடிக்கையின் இரண்டு கட்ட தளர்வுகள், ஒன்ராரியோவில் வின்ற்சர் எசக்ஸ் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்லப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் வின்ற்சரில் அடையாளம் காணப்பட்ட 20 தொற்றுக்களுடன், இந்த வாரம் 175 தொற்றுக்கள் அங்கு இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் வின்ற்சரில் அதிகப்படியாக தொற்றுக்கள் பரவிய விவசாயப் பண்ணைகள் தற்காலிகமான மூடப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நேற்று கனடா தினம் நாளார்ந்த தொற்றுக்கள் குறித்த அறிக்கை வெளியாகியிருக்காத நிலையி;ல், இன்று அந்த இரண்டு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் 24,322 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒன்ராரியோவி;ல் இதுவரை 35,370 தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், இவற்றில் 86.9 சதவீதமான 30,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2680 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 29 பிரிவுகளில் ஐந்திற்கும் குறைவான அல்லது எவ்வித தொற்றுக்களும் அடையாளம் காணப்படாத பிரிவுகளாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிறின்ரீன் எலியட் தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட முடக்கநிலையில் இருந்து படிப்படியாக தளர்வை மேற்கொண்டு நாளார்ந்த இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் மாகாண அரசின் நடவடிக்கையின் இரண்டு கட்ட தளர்வுகள், ஒன்ராரியோவில் வின்ற்சர் எசக்ஸ் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்லப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் வின்ற்சரில் அடையாளம் காணப்பட்ட 20 தொற்றுக்களுடன், இந்த வாரம் 175 தொற்றுக்கள் அங்கு இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் வின்ற்சரில் அதிகப்படியாக தொற்றுக்கள் பரவிய விவசாயப் பண்ணைகள் தற்காலிகமான மூடப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.


Comments
Post a Comment