Skip to main content

வின்ற்சர் எசக்ஸ்சில் 20 தொற்றுக்கள் மட்டுமே!

ஒன்ராரியோவில் கோவிட்-19 கொறோனா நுண்மி பெருந்தொற்றுக்கள் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளில் முறையே 149, 153 தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டன.
நேற்று கனடா தினம் நாளார்ந்த தொற்றுக்கள் குறித்த அறிக்கை வெளியாகியிருக்காத நிலையி;ல், இன்று அந்த இரண்டு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் 24,322 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒன்ராரியோவி;ல் இதுவரை 35,370 தொற்றுக்கள் இனம் காணப்பட்டதுடன், இவற்றில் 86.9 சதவீதமான 30,730 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2680 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.


ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள 34 சுகாதாரப் பிரிவுகளில் 29 பிரிவுகளில் ஐந்திற்கும் குறைவான அல்லது எவ்வித தொற்றுக்களும் அடையாளம் காணப்படாத பிரிவுகளாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிறின்ரீன் எலியட் தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்ட முடக்கநிலையில் இருந்து படிப்படியாக தளர்வை மேற்கொண்டு நாளார்ந்த இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் மாகாண அரசின் நடவடிக்கையின் இரண்டு கட்ட தளர்வுகள், ஒன்ராரியோவில் வின்ற்சர் எசக்ஸ் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்லப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் வின்ற்சரில் அடையாளம் காணப்பட்ட 20 தொற்றுக்களுடன், இந்த வாரம் 175 தொற்றுக்கள் அங்கு இனம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் வின்ற்சரில் அதிகப்படியாக தொற்றுக்கள் பரவிய விவசாயப் பண்ணைகள் தற்காலிகமான மூடப்படுவதாக முதல்வர் டக் ஃபோர்ட் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Comments

Popular posts from this blog

சிறார் துஷ்பிரயோகத்தை கண்டு கொள்ளாத இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

 இலங்கையில் கடந்த 2010 முதல் 2019 வரையான காலப்பகுதியில் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் மேற்கொள்ளப்பட்ட 48,000 முறைப்பாடுகளில், ஐநூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகள் தொடர்பில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிகக்குறைவான கொறோனா தொற்றுக்கள் ஒன்றாரியோவில் பதிவு

கடந்த மூன்று மாதங்களின் பின் ஒன்ராறியோவில் குறைந்த எண்ணிக்கையில் கோவிட்-19 கொறேனா பெருந்தொற்றின் நாளார்ந்த எண்ணிக்கை 111 ஆக பதிவாகியது. கோவிட் 19 தொற்று வீரியம் பெறத் தொடங்கிய மூன்று மாத காலத்தின் பின், இன்று ஆகக் குறைந்த எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 189 ஐ விடவும் இது கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது கடந்த 5 நாட்களுக்கான சராசரி எண்ணிக்கை 168 ஆகும். இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி என்றாலும், ஒரு நாள் தரவிலிருந்து நாங்கள் பல முடிவுகளை எடுக்கக்கூடாது என்று மாகாண நலத்துறை அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவலின் வீழ்ச்சியை நாம் தொடர்ச்சியாகக் கண்கானித்து வருவோம் எனத் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாகாணத்தின் ஆய்வுகூடங்களில் சுமார் 30,780 சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. தொற்றுநோய்க்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் மிகக் குறைந்துள்ளது. முதல் தடவையாக 2000 க்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மாகாணத்தில் 34 சுகாதாரப் பிரிவுகளில் 19 பிரிவுகள...

கடந்த வாரம் 2% ஆனவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் - கனடிய பொதுச் சுகாதார மருத்துவர்!

கனடாவில் இதுவரை சுமார் 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு கோவிட்-19 தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடிய பொதுச் சுகாதாரத்துறை தலைவர் மருத்துவர் தெரேசா ராம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானவர்கள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே கொறோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவர் ராம் கூறினார். கனடாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 44 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 59,851 பேர் குணமடைந்தும், 8183 பேர் மரணித்தும் உள்ளனர்.